மின் துாக்கி அறுந்து விழுந்ததில் இருவர் பரிதாபகரமாக பலி..!

ஆசிரியர் - Editor I

மின் துாக்கி(லிவ்ற்) அறுந்து விழுந்ததில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் கண்டி லேவெல்ல பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளது. 

லேவெல்ல தர்மா அசோக மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலையின் மின்தூக்கியே இன்று காலை அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 57 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 55 வயதான மற்றும் ஒரு நபர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இருவம் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு