கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த விசேட புலனாய்வு பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் விசாரணை..!

ஆசிரியர் - Editor I

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழ் மக்களே என கூறிய கருத்து தொடர்பில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள விசேட சி.ஐ.டி குழு சீ.வி.விக்னேஷ்வரனிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் வைத்தே இந்த விசாரணை இடம்பெறுவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. 

மாலை 4.00 மணியளவில் ஆரம்பமான விசாரணைகள் தற்போது வரையில் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

பொதுத் தேர்தலுக்கு முன்னரும் சி.ஐ.டி.யினர் இதேபோன்ற விசாரணை ஒன்றை விக்கினேஸ்வரனிடம் நடத்தியிருந்தார்கள்.

தமிழ் மக்கள்தான் இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் என்ற கருத்தில் அவர் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெறுவதாகத் தெரிகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு