இலங்கையில் கொரோனா சமூக தொற்றாக மாறியுள்ளதா..? இராணுவ தளபதி விளக்கம், 1083 தொற்றாளர்கள் மினுவாங்கொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் சமூக மட்டத்திலிருந்து கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. என தொிவித்திருக்கும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, 

கொரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் ஹம்பாக - மினுவாங்கொட கொத்தணைியை சேர்ந்தவர்கள் எனவும், அது தவிர்ந்து சமூக மட்டத்திலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை. எனவே இது சமூக தொற்று அல்ல. எனவும் கூறியிருக்கின்றார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்த 1083பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நோய்த்தொற்றுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காணவும், அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவும் அவர் கூறியிருக்கின்றார். இதேவேளை  பாணத்துறை வைத்தியசாலையில் பணிப்புரிகின்ற தாதியர் ஒருவரின் மகளுக்கு 

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையினை தொடர்ந்து, வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையில் நேற்று மாத்திரம் 7196.பி.சி.ஆர்.சோதனைகள், இலங்கையில் நடத்தப்பட்டுள்ளன. 

ஒரே நாளில் நாட்டில் நடத்தப்பட்ட பி.சி.ஆர்.சோதனைகளில் இதுவே அதிக எண்ணிக்கையாகும் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4523 ஆக அதிகரித்துள்ளது. 

இலங்கையில் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு