கோவில் கேணி அருகில் பூசகர் சடலமாக மீட்பு..! அடித்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகம், யாழ்.புங்குடுதீவில் பயங்கரம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.புங்குடுதீவு - ஊரதீவு சிவன்கோவில் கேணி அருகில் பூசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பூசகர் அடித்து கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2ம் இணைப்பு..

ஊரதீவு சிவன்கோவில் பூசகரான கிளிநொச்சியை சேர்ந்த ரூபன் சர்மா (வயது33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கொலைச்சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் ஊர்காவற்றுறை பொலிஸார்  பூசகரின் உதவியாளரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர். 

இதேவேளை குறித்த பூசகரி புங்குடுதீவு உள்ளிட்ட தீவக பகுதிகளில் இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு தொிவித்துவந்ததுடன், பொலிஸாருக்கு தவல்களையும் வழங்கிவந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு