வீட்டுக்குள் புகுந்து மகன் மீது சரமாரி வாள்வெட்டு, தடுக்க சென்ற தாய் மீதும் தாக்குதல்..! யாழ்.நீர்வேலியில் நேற்றிரவு பயங்கரம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டிருந்த மகன் மற்றும் தாய் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு 8 மணியளவில் வீட்டுக்குள் சடுதியாக வாள்களுடன் நுழைந்த வன்முறைகும்பல், 

இளைஞன் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தடுக்க சென்ற இளைஞனின் தாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். 

பின்னர் வீட்டிலிருந்த பொருட்கள், கதவுகள், ஜன்னல்களை அடித்து நொருக்கியதுடன் அங்கிருந்து சென்றுள்ளனர். இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அண்மையில் யாழ்.நகரில் வாள்வெட்டுக்கு இலக்கான

ரவுடி தனுரொக்கின் நண்பர் என கூறப்படுகின்றது.  மேலும் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு