திலீபனுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி!
தியாக தீபம் திலீபனுக்கு நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இந்த நினைவு கூரல் நிகழ்வு, நடைபெற்றது. இதன்போது, மாணவர்கள் முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
திலீபனின் நினைவுகூரலுக்கு பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை விதித்துள்ள நிலையில், மாணவர்களால், இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகம் உட்பட முக்கிய இடங்களில் நினைவேந்தலைத் தடுக்க பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும், இந்த நினைவு கூரல் இடம்பெற்றுள்ளது.