யாழ்.குருநகரில் வீடு உடைத்து 20 பவுண் நகை, 35 ஆயிரம் பணம் கொள்ளை..! 17 வயது கள்ளன் உட்பட இருவர் கைது, நகைகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் வீடு உடைத்து 20 பவுண் நகை, 35 ஆயிரம் பணம் கொள்ளை..! 17 வயது கள்ளன் உட்பட இருவர் கைது, நகைகள் மீட்பு..

ஆட்களற்ற வீட்டை உடைத்து சுமார் 20 பவுண் நகைகள், மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். 

குறித்த இளைஞனிடமிருந்து நகைகளை வாங்கி அடகுவைத்த ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. 

இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி முற்பகல் இடம்பெற்றது. வீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்ற நிலையில்,  வீட்டை உடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டன.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக 

பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.திருநகரைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்துக் கொடுத்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு