நீதிமன்ற உத்தரவுக்கமைய காரைநகரில் பலசரக்கு கடைக்கு சீல்..!

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற உத்தரவுக்கமைய காரைநகரில் பலசரக்கு கடைக்கு சீல்..!

யாழ்.காரைநகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த கடை ஒன்று நீதிமன்ற உத்தரவின் பெயரில் சீல்வைத்து மூடப்பட்டிருக்கின்றது. 

குறித்த கடையினை சுகாதார பரிசோதகர் சோதனைக்குட்படுத்தியபோது பழுதடைந்த நெத்தலி, மிளகுதுாள் பொதிகள், உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டது. 

மேலும் கடை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளது. மேலும் உரிய நியமங்களுக்கமைய எச்சரிக்கை விளம்பரம் அற்ற சுருட்டு கட்டுக்களும் கடையிலிருந்து மீட்கப்பட்டது. 

இந்த விடயம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரால் , ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோணிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் 

வழக்கு விசாரணைக்கு வந்தது. எச்சரிக்கை ஒளிப்படம் இன்றி விற்பனைக்காக சுருட்டினை வைத்திருந்த குற்றத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து மன்று உத்தரவிட்டது.

சுகாதார சீர்கேட்டுடன் கடை இயங்கியமையால் காலவரையின்றி கடையினை மூடி சீல் வைக்க உத்தரவிட்ட நீதிவான், வழக்கினை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு