ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! சாவகச்சேரியில் சம்பவம்..
ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொட்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி- அக்கராயன் பகுதியிலிருந்து பெண்னொருவர் பேருந்தில் யாழ்.ப்பாணம் வந்துள்ளார்.
பேருந்தின் வாசலில் குறித்த பெண் அமர்ந்திருந்த நிலையில் யாழ்.சாவகச்சேரியில் வீதியின் குறுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்று நுழைந்த்தையடுத்து
பேருந்தின் சாரதி சடுதியாக பிறேக் போட்டுள்ளார். இதன்போது பெண்ணின் கையிலிருந்த குழந்தை தவறி வீதியில் விழுந்து காயமடைந்துள்ளது.
இதனையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.