யாழ்.கொழும்புத்துறையில் 18 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொழும்புத்துறையில் 18 வயது இளம்பெண் ஹெரோயினுடன் கைது..!

யாழ்.கொழும்புத்துறை கெலன்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 18 வயதான இளம் பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையில்,

சக மதுவரிபரிசோதகர் ரசிகரன் மற்றும் அனுஷன், வாசுகி ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 185 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் 

குறித்த இளம் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றத்தில் முற்படுத்த மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு