ஊடக பணியாளர் மீது அதிகாலையில் வாள்வெட்டு, மோட்டார் சைக்கிளும் திருட்டு..! யாழ்.கந்தரோடையில் வாள்வெட்டு குழு அடாவடி..
யாழ்.கந்தரோடை வீதியில் அதிகாலை 4.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் அவருடைய மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளது.
சம்பவத்தில் வலம்புரி பத்திரிகையின் பணியாளரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன்(வயது47) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், மோட்டார் சைக்கிளையும் பறிகொடுத்துள்ளார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த நபர் கந்தரோடை பகுதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழு குறித்த பணியாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு
பணியாளரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி சென்றிருக்கின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.