கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் மீது தாக்குதல்..! காணி விவகாரம் ஒன்றை விசாரிக்க சென்றபோது இன்று மாலை சம்பவம்..
காணி விவகாரம் தொடர்பில் விசாரிக்க சென்றிருந்த கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் ஐங்கரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.