சிவாஜிலிங்கம் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்..!

ஆசிரியர் - Editor I
சிவாஜிலிங்கம் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்..!

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்தியதற்காக நேற்று கைது செய்யப்பட்ட்ட தமிழ்தேசிய கட்சியின் செயலாளரும், மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்றைய தினம் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் எனத் தெரிகின்றது.இதேவேளையில் சிவாஜிலிங்கத்தை பிணையில் எடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைதாகியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு