தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க வேண்டாம்..! இளைஞர்கள் சிலர் போராட்டம், உட்கட்சி சதியா..?
தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள திலீபனின் நினைவுதுாபியை புனரமைப்பு செய்யவேண்டாம். எனக்கோரி ஏழாலையில் இளைஞர்கள் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
“தியாகி திலீபனின் நினைவு துாபியை தயவு செய்து புனரமைக்கவேண்டாம்” என எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு குறித்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அண்மையில் குறித்த நினைவு துாபியை நோில் சென்று பார்வையிட்டிருந்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளதும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன்
மற்றும் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோர் நினைவு துாபியை புனரமைப்பது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென சுமார் 10 தொடக்கம் 15 இளைஞர்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர். எனவே இதுவும் உட்கட்சி சதியா? கட்சிகாரரே முணுமுணுப்பு..