குப்பைகளை தரம் பிரித்துவைக்குமாறு கூறியதற்காக சுகாதார தொழிலாளிகள் மீது தாக்குதல்..! இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
குப்பைகளை தரம் பிரித்துவைக்குமாறு கூறியதற்காக சுகாதார தொழிலாளிகள் மீது தாக்குதல்..! இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.சாவகச்சேரி நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி டச்சு வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் 

குப்பைகள் தரம்பிரித்து வைக்கப்படாமை தொடர்பில் இருதரப்புக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுதாதார தொழிலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதலுக்குள்ளான தொழிலாளிகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வ.விஜிதரன்(19),ஆனந்தராஜ்(19) என்ற இரு சுகாதார தொழிலாளர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு