நிறை மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம்..! மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய பின் பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள், யாழ்.சாவகச்சோியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சோி - மட்டுவில் சாந்திபுரம் பகுதியில் நிறை மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கியதுடன், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இந்தச் சம்பவம் இன்று அதிகாலைசாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வாள்கள் சகிதம் உலாவியதோடு 

பிரதேசத்தின் அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனையடுத்து ஒன்று திரண்ட பிரதேச மக்கள் இருவரையும் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், மோட்டாரச் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இருவரும் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் 

என பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு