யாழ்.நெல்லியடி பகுதியில் ஹெரோயின் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது..!
யாழ்.நெல்லியடி - அரசடி பகுதியில் 34 வயதான ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 34500 ரூபாய் பணம் மற்றும், ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட நபர் நெல்லியடி திக்கம் பகுதியை சேர்ந்தவர் எனவும்,
குறித்த நபர் ஹெரோயின் விநியோகத்திற்காக வந்திருந்தபோதே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.