யாழ்.மீசாலையில் வீடு புகுந்து குடும்ப பெண் மீது சரமாரி வாள்வெட்டு..! படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி, வாள்வெட்டு குழு அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சேரி - மீசாலை பகுதியில் இன்று இரவு வாள்வெட்டு கும்பல் வீடு புகுந்து குடும்ப பெண் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரவு 9.30 மணியளவில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு

தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் சிறீதரன் பவானி (வயது40) என்ற பெண் மீதே வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணக்களை

மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு