யாழ்.கொடிகாமம் பகுதியில் தொடரும் வழிப்பறி..! பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய ஆசிரியை சங்கிலியை இழந்தார்.. இன்று மதியம் சம்பவம்..
கொடிகாமம் கெற்பேலி விடத்தற்பளை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இருந்து விடத்தற்பளைக்கு செல்லும் சந்தியில் இன்று நண்பகல் இடம்பெற்றது. சுமார் ஒரு பவுண் சங்கிலியே அறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.