யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் உணரப்பட்ட குண்டுவெடிப்பு சத்தங்களுக்கு காரணம் என்ன..? தெளிவு படுத்தியது பாதுகாப்பு தரப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகரப்பகுதி மற்றும் அராலி, வட்டுக்கோட்டை பகுதிகளில் உணரப்பட்ட அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சத்தங்களுக்கு காரணம் பழைய குண்டுகளை செயலிழக்க செய்தமையே என பாதுகாப்பு தரப்பு தெளிவுபடுத்தியிருக்கின்றது. 

இன்று காலை தொடக்கம் நண்பகல் தாண்டிரும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சத்தங்கள் உணரப்பட்டது. குறிப்பாக மானிப்பாய், அராலி போன்ற பகுதிகளில் வீடுகள் அதிர்ந்ததாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் படையினரினால் பழைய வெடிபொருட்கள்

செயலிழிப்பு செய்யப்பட்டமையே இந்த குண்டு வெடிப்பு சத்தங்களுக்கு காரணம் என பாதுகாப்பு தரப்பு தெளிவுபடுத்தியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு