மருத்துவ கழிவுகளை என்ன செய்கிறீர்கள்..? யாழ்.மாநகருக்குள் உள்ள வைத்தியசாலைகளிடம் விளக்கம் கேட்க தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
மருத்துவ கழிவுகளை என்ன செய்கிறீர்கள்..? யாழ்.மாநகருக்குள் உள்ள வைத்தியசாலைகளிடம் விளக்கம் கேட்க தீர்மானம்..

யாழ்.தெல்லிப்பளையில் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ கழிவுகளை தகனம் செய்யும் தொகுதி உரிய நியமங்களுடன் அமைக்கப்படவில்லை. என சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.மாநகரசபை உறுப்பனர் வ.பார்த்தீபன், பராமரிப்பிலும் பாரிய குறைபாடுகள் காணப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த தகன தொகுதி உரியமுறையில் பேணப்படவில்லை. என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், 

மருத்துவக் கழிவுகளினை தகனம் செய்யும்போது வெளிவரும் புகையினை 80 அடி உயரமான புகைக்கூட்டின் ஊடாகவே வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் அங்கு காணப்படுகின்ற தகன தொகுதியின் புகைக் கூட்டின் உயரமானது ஏறத்தாழ 30 அடி முதல் 40 அடி வரையே காணப்படுகின்றது.

இவ்வாறு 80 அடி உயரமான புகைகூட்டின் வழியே தான் மருத்துவக்கழிவுகளை தகனம் செய்யும்போது புகையினை வெளியேற்ற வேண்டும். இந்நிலையில் குறித்த தகன தொகுதியில் மருத்துவக் கழிவுகளினைத் எரியூட்டும் போது பின்பற்றப்படும் முறைமை மிகுந்த அதிர்ச்சியை அழிக்கின்றது.

ஏனெனில் அங்கு மருத்துவக்கழிவுகளை எரியூட்டும்போது எரியூட்டியின் கதவுகளை மூடாமல் திறந்து விட்டவிடப்பட்டே எரியூட்டப்படுகின்றது. இந்நிலை மிக மோசமான விளைவுகளைக் ஏற்படுத்தவல்லது. என்று கூறப்படுகின்றது. அப்பகுதியில் மருத்துவப்பொருட்களை எரியூட்டும்போது 

எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் இதற்கு சான்று பகர்கின்றன. இது தொடர்பில் இன்றைய யாழ்.மாநகர சபை அமர்வின் போது என்னால் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்.மாநகர எல்லைக்கு வெளியில் குறித்த கொகுதி காணப்படுவதன் காரணமாக குறித்த செயல்முறை தொடர்பாக 

எம்மால் கேள்விக்குட்படுத்த முடியாது. அது தொடர்பில் அப்பகுதி உள்ளூடாட்சி மன்றங்களோ அல்லது பிராந்திய சுகாதார பணிமனையோ தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் யாழ்.மாநகர சபை எல்லைகக்குள் காணப்படுகின்ற சில வைத்தியசாலைகள் குறித்த மருத்துவக் கழிவுகளினை 

அனுமதியின்றி குறித்த எரியூட்டும் தொகுதி நிலையத்தின் பின்கதவு வழியாக கொண்டு சென்று எரியூட்டுவதாகவும் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். அந்தவகையில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 10க்கும் மேற்பட்ட தனியார் வைத்தியசாலைகள் 

அவர்களுடைய மருத்துவக்கழிவுகளிகள் மற்றும் சத்திரச்சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகின்ற உடல் அவயங்களினை எவ்வாறு எப்பொறிமுறையின் கீழ் அகற்றுகின்றார்கள் என்பது தொடர்பாக யாழ்.மாநகர சபை உடனடியாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்படவேண்டும். 

என்பதுடன் அது தொடர்பான அறிக்கையினை பெற்று சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கேட்டதற்கு இணங்க சபையின் ஏகமனதான முடிவின் பிரகாரம் மாநகர முதல்வர் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு முதல் அனைத்த தனியார் வைத்தியசாலைகளிலும் குறித்த முறை தொடர்பில் விளக்கம் கேட்டு 

அவர்களின் பதில்களைப் பெற்று சமர்பிக்குமாறு பணித்தார். குறித்த எரியூட்டும் தொகுதி மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக அவ்பகுதி உள்ளுராட்சி மன்றம் மற்றும் பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள் கரிசனை செலுத்தவேண்டும். என கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு