யாழ்.பல்கலைகழக மருத்துவ மாணவர்களின் கற்றலுக்காக உடல் தானம்..! இறந்தவரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி மற்றும் பிள்ளைகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மருத்துவ மாணவர்களின் கற்றலுக்காக உடல் தானம்..! இறந்தவரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி மற்றும் பிள்ளைகள்..

இறந்த பின்னர் தன் உடலை யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கற்றலுக்காக வழங்கவேண்டும். என விரும்பியதற்கமைய முத்தையா சிவானந்தன் (வயது-73) என்ற முதியவரின் உடல் நீதிமன்ற ஒப்புதலுடன் மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

முதியவர் தன் ஆசையை உயிருடன் இருக்கும்போது தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தொிவித்த நிலையில் அவர் இறந்த பின்னர் அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக காங்கேசன்துறை பொலிஸார் ஊடாக மனைவி மற்றும் பிள்ளைகள் விண்ணப்பம் செய்திருந்தனர். 

இந்த விண்ணப்பத்தை ஆராய்ந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா யாழ்.பல்கலைகழகத்திற்கு உடலை ஒப்படைக்க ஒப்புதல் வழங்கினார். 


.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு