யாழ்.மாவட்டத்தில் 3027 ஏக்கர் காணி முப்படை மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில்..! இனியாவது பேசுவார்களா..?
யாழ்.மாவட்டத்தில் சுமார் 3000 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரிடம் யாழ்.மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தொிவிக்கின்றன.
சுமார் 3027.85 ஏக்கர் தனியார் காணிகள் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுவதாக யாழ் மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 23850. 72 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்த நிலையில்
2014 ஆம் ஆண்டு 16775.50 ஏக்கராகவும் 2015ம் ஆண்டு 7075.22 ஏக்கராகவும் 2019ம் ஆண்டு 4047 .37 ஏக்கராகவும் குறைவடைந்துள்ளது. தற்போது அது 3027.85 ஏக்கராக காணப்படுகின்றது.
இதன்படி தனியார் காணிகளில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 21.91 ஏக்கரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 54.59 ஏக்கரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 2.37 ஏக்கரும்,
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 32.50 ஏக்கரும், யாழ்ப்பாணத்தில் ஒரு ஏக்கரும், நல்லூரில் 4.85 ஏக்கரும், சண்டிலிப்பாயில் 26.53 ஏக்கரும், சங்கானையில் 23.68 ஏக்கரும்,
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 0.71 ஏக்கரும், தெல்லிப்பழையில் 2480.15 ஏக்கரும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 9.61 ஏக்கரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 70.88 ஏக்கரும்,
கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 4.49 ஏக்கரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 9.39 ஏக்கரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 285.20 ஏக்கரும் பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ளது.
இவற்றில் இலங்கை இராணுவத்திடம் 2054 .25 ஏக்கரும், கடற்படையிடம் 274.57 ஏக்கரும், விமானப்படையிடம் 646.50 ஏக்கரும், பொலிஸாரிடம் 52.53 ஏக்கரும் உள்ளதாக அறியமுடிகின்றது.