யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 3 பிள்ளைகளின் தாய் பலி..! சிறிய விபத்தினால் நடந்த விபரீதம்..

ஆசிரியர் - Editor I

விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 3 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்.தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த பிரதீபன் சதீனா(வயது 38) என்ற 3 பிள்ளைகளின் தாயே நேற்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன. 

கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பழையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தபோது திடீரென பிரேக் பிடித்தால், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார் 

அத்துடன் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்று வீழ்ந்துள்ளது.இதனால் தலையில் படுகாயமடைந்து மயக்கம் அடைந்துள்ளார். அவ்வாறு மயக்கம் அடைந்த அவர் 

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு