மிக பழமைவாய்ந்த 4 வாள்களை விற்பனை செய்ய முயன்றவர் கைது..! யாழ்.வடலியடைப்பில் அதிரடிப்படையினர் அதிரடி, வாள்களும் மீட்பு..
மிக பழமைவாய்ந்த 4 வாள்களுடன் வடலியடைப்பு பகுதியில் 32 வயதான இளைஞர் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழமையான குறித்த வாள்களை விற்பனை செய்வதற்கு குறித்த நபர் முயற்சித்த நிலையில் அது தொடர்பான தகவல் அதிரடிப்படையினருக்கு கசிந்த நிலையில்,
இன்று இரவு குறித்த நபரின் வீட்டிற்குள் நுழைந்த அதிரடிப்படையினர் வாள்களை மீட்டுள்ளதுடன், 4 வாள்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரும் வாள்களும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.