யாழ்.மீசாலையில் 55 பெண்ணின் சங்கிலியை அறுத்த கள்ளனின் புகைப்படம் CCTV கமராவில் சிக்கியது..! விசாரணை தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலையில் 55 பெண்ணின் சங்கிலியை அறுத்த கள்ளனின் புகைப்படம் CCTV கமராவில் சிக்கியது..! விசாரணை தீவிரம்..

யாழ்.மீசாலை பகுதியில் 55 வயதான பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கள்ளனின் புகைப்படம் அப்பகுதியில் இருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மீசாலை வடக்கு பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவர் சைக்கிளில் கோவிலுக்கு சென்றுவிட்டு

வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் அவரது வீட்டிற்கு அண்மையில் வைத்து குறித்த பெண் அணிந்திருந்த சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

கோவிலில் இருந்து பெண் வீடு நோக்கி சென்ற போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே அவரை தள்ளிவிட்டு சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சங்கிலி அறுத்துக்கொண்டு தப்பிச்சென்ற இளைஞரை அருகில் இருந்த சிசிரிவி படமெடுத்துள்ளது. அவர் முகத்தை மறைத்து மாஸ்க் அணிந்துள்ளார்.

அறுக்கப்பட்ட சங்கிலி சுமார் 2 பவுண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு