சாவகச்சோி - தனங்கிளப்பு பகுதியில் கோர விபத்து..! பெண்னொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சோி- தனங்கிளப்பு பகுதியில் இன்று காலை 11.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண்னொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சங்குப்பிட்டி வீதியில் இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை. 

அவர் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்துள்ளது. சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பரும் மோதியுள்ளன.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு