சக்கரம் காற்றுப்போன நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அம்புலன்ஸ் வண்டி விபத்து..! பருத்துறை - குஞ்சர்கடை பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சக்கரம் காற்றுப்போன நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அம்புலன்ஸ் வண்டி விபத்து..! பருத்துறை - குஞ்சர்கடை பகுதியில் சம்பவம்..

அம்புலன்ஸ் வண்டியின் முன் சக்கரத்தில் காற்றுபோன நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

யாழ்.மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நவீனரக அம்புலன்ஸ் வண்டியே இன்று அதிகாலை 1.30 மணியளவில் பருத்துறை- குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

மந்திகை ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளி ஒருவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துவிட்டு மீண்டும் மந்திகை நோக்கி சென்றபோது,

சில்லு ஒன்றின் காற்று வெளியேறிய நிலையில் அம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்தினால் அம்புலன்ஸுன் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு