கோவிலில் கலைவந்து ஆடியவர் சூலத்தின் மீது தவறி விழுந்து படுகாயம்..! யாழ்.மிருசுவில் பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கோவிலில் கலைவந்து ஆடியவர் சூலத்தின் மீது தவறி விழுந்து படுகாயம்..! யாழ்.மிருசுவில் பகுதியில் சம்பவம்..

யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கலைவந்து ஆடியவர் சூலத்தின் மீது தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 

நேற்று மாலை பூசை இடம்பெற்றிருந்த நிலையில் கெற்பெலி மேற்கு மிருசுவிலை சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு திடீரெ கலைவந்துள்ளது. 

இதனையடுத்து அவர் ஆடியபடியே அங்கிருந்த சூலத்தின் மீது விழுந்துள்ளார். இதன்போது சூலம் அவரின் உடலில் ஏறி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு