பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த 3 இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..! கள்ள மணலுடன் தப்பி ஓட முயன்றபோது சம்பவம்..
மணல் ஏற்றிவந்த இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் காயமடைந்த 3 இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிவந்தபோது பொலிஸார் வழிமறித்துள்ளனர். எனினும் உழவு இயந்திரத்தை நிறுத்தாமல் தப்பி ஓடுவதற்கு முயற்சித்த நிலையில் துரத்தி பிடித்த பொலிஸார்,
அதில் பயணம் செய்த இளைஞர்கள் மீத மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தனர்.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்காகி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வியாழக்கிழமை மாலை சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் நிறுத்தப்பட்டதுடன், அன்று இரவே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து காயமடைந்த இளைஞர்கள் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பொலிஸாரின் தாக்குதலி தலை, உடம்பு, மற்றும் காது பகுதிகளில் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.