யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று..!
யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஐவரும் நோயாளர் காவு வண்டி மூலம் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.