நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னபலத்தின் வீட்டு கூரையிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி மரணம்..!

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னபலத்தின் வீட்டு கூரையிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி மரணம்..!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக கட்டிவரும் வீட்டின் கூரையிலிருந்து தவறி விழுந்த காலியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது.காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார்.நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட 

காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் தவறி நிலத்தில் வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துவிட்டார் என்று ம

ருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது. இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இன்றிரவு இடம்பெற்றது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு