கோவில் வளாகத்திற்குள்ளிருந்து ஹெரோயின் பாவித்த 5 பேர் கைது..! யாழ்.கொக்குவில் கிழக்கில் பொலிஸார் அதிரடி..
போதைப் பொருள் பாவித்துக் கொண்டிருந்த 5 பேர் கொக்குவில் கிழக்கில் உள்ள கோவில் வளாகத்திலிருந்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, நேற்றிரவு ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்படவர்களிடம் இருந்து 210 மில்லிக் கிராம் ஹெரோயின்
மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.