மோட்டார் சைக்கிளுக்குள் மறைத்து கஞ்சா விற்பனைக்கு சென்றவர் யாழ்.நகரில் கைது..! குருநகரை சேர்ந்த 46 வயதான குடும்பஸ்த்தராம்..

ஆசிரியர் - Editor I

248 கிராம் கஞ்சாவுடன் 46 வயதான நபர் யாழ்.நகரில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் யாழ்.குருநகரை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. குறித்த நபர் யாழ்.நகரப் பகுதியில் விற்பனைக்கு தயாராக தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை 

மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான அணியினரால் 

குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு