யாழ்.மாவட்டத்தில் 2 நாட்களில் 92.8 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சி பதிவு..! அடுத்த 18 மணித்தியாலங்களுக்கு மழை தொடரலாம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணிவரையான கலாப்பகுதியில் 55.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறியிருக்கும் யாழ்.பிராந்திய வளிமண்டலவியல் ஆராச்சி நிலையத்தில் பொறுப்பதிகாரி த.பிரதீபன், 

இன்று காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 2.30 வரையில் 22.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேவேளை அடுத்த 18 மணித்தியாலங்களுக்கு மழைவீழ்ச்சி தொடரும் எனவும் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று 8.30 மணி வரை 55.4 மில்லி மீற்றர் மழையும் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 2 30 மணி வரையில் 22.7 மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. அச்சுவேலிப் பகுதியில் 92.9 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

அதேபோல தெல்லிப்பழை பிரதேசத்தில் 84.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த வருடம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இன்று வரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 343.9 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

வடக்கு பகுதியில் கடற்தொழிலில் ஈடுபடுவோர் மிக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு