யாழ்.மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I

காலநிலை சீரின்மையினால் கடந்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என யாழ்.மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தொிவித்துள்ளார். 

தற்போது உள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், 

தற்போது வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் கணிசமான அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை எந்தவித அனர்த்தங்களோ சேதங்களோ இடம்பெற்றதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு அறிக்கை கிடைக்கவில்லை. 

அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு இந்த நிலைமை தொடர்ச்சியாக நீடிக்கும் என வளிமண்டல திணைக்களத்தினரால் எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் 

குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கோரப்படுகிறார்கள். அதிலும் கடல் பகுதிகளில் 70 -80 கிலோ மீற்றர்ர் வேகத்தில் காற்று வீசக் கூடிய நிலை காணப்படுவதால் 

மீனவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு