யாழ்.மாவட்டத்திலுள்ள பிரபல கோவில்களின் திருவிழாக்களுக்குள் நுழையும் கொள்ளை கும்பல்..! செல்வச்சன்நிதி ஆலய தேர் திருவிழாவில் 27 பவுண் கொள்ளை, 2 பெண்கள் கைது..

ஆசிரியர் - Editor I

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தபோது சுமார் 27 பவுண் நகை கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. 

தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடமே 27 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பெண்கள் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. யாழ்.மாவட்டத்தில் ஆலய திருவிழாக்களை இலக்குவைத்து

கொள்ளை கும்பல் வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்குள் வந்து கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. நல்லுார் கந்தசுவாமி ஆலய திருவிழாவிலும் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 

கும்பல் கைது செய்யப்பட்டிருந்தது. அந்த கொள்ளையர்களும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் தொடர்ச்சியாக இப்படியான திருவிழா கொள்ளைகள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு