யாழ்.நாவாந்துறையில் போதைப்பொருள் விற்பனை முகவர்கள், சமூக விரோதிகளை இலக்குவைத்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்..! பலர் கைது..
யாழ்.நாவாந்துறை பகுதியில் இன்று காலை படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய பாரிய சுற்றிவளைப்பு தேடுதலில் போதைப்பொருள் விற்பனை முகவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரிகள், மற்றும் சமூகவிரோத கும்பல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதலில் வாள் ஒன்று மீட்கப்பட்டதுடன் போதைப்பொருள் விற்பனை முகவர்கள்
கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று காலை முதல் இவ்வாறு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் சிலர்
கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.