செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இரு பெண்கள் சிக்கினர்..! வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களாம், குழுவாக வந்திருக்கலாம் என சந்தேகம்..
யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இரு பெண்கள் கைது ஆலய வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் ஆலய திருவிழாக்களில் திருடும் நோக்கில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அவர்களுடன் வந்த மேலும் சிலர் இருக்கலாம்
என சந்தேகிப்பதுடன் அந்த கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.