22 வயதான இளம் மனைவியை தீயிட்டு கொழுத்திய கணவன்..! 27 நாட்களின் பின் மனைவி மரணம், கணவன் கைது யாழ்.அல்வாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
22 வயதான இளம் மனைவியை தீயிட்டு கொழுத்திய கணவன்..! 27 நாட்களின் பின் மனைவி மரணம், கணவன் கைது யாழ்.அல்வாயில் சம்பவம்..

கணவனால் தீயிட்டு கொழுத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளம் பெண் 27 நாட்கள் சிகிச்சையின் பின் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

யாழ்.அல்வாய் வடக்கை சேர்ந்த ரூபிகா (வயது-22) என்ற பெண்ணே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த 4ஆம் திகதி 

எரிகாயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடும்பத் தகராறு காரணமாக கணவர் தீ மூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 27 நாள்களின் பின்னர் அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.அவரது உயிரிழப்பையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட கணவர் 

இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் மீளவும் கைது செய்யப்பட்டார். இளம் குடும்பப் பெண்ணில் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

நாளை உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு