சந்திரசேகர பிள்ளையார் ஆலய விக்கிரகங்களின் வாயிலிருந்து சுரக்கும் நீர்..! கும்பாபிஷேகம் நிறைவடைந்தவுடன் வழக்கமாக நிகழும் அற்புதம்..

ஆசிரியர் - Editor I
சந்திரசேகர பிள்ளையார் ஆலய விக்கிரகங்களின் வாயிலிருந்து சுரக்கும் நீர்..! கும்பாபிஷேகம் நிறைவடைந்தவுடன் வழக்கமாக நிகழும் அற்புதம்..

வரலாற்று சிறப்பு மிக்க கல்வியங்காடு சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான்,வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே நீர் போன்ற திரவம் வடிகிறது.இதனை அறிந்த பெருமளவான பொதுமக்கள் ஆலயத்துக்குச் சென்று நீர் வடியும் விக்கிரகங்களை பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர்.

இது தொடர்பில் ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவிக்கையில் விக்கிரகங்களின் வாயில் இருந்து இவ்வாறு திரவம் வருவது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயற்பாடு என்றார்.

இதேவேளை கும்பாபிஷேகம் நிறைவடைந்தவுடன் இந்த அற்புதம் நிகழ்வது மிக நிண்டகாலமாக நடப்பதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு