கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த பெண் சுத்திகரிப்பு பணியாளர் பலி..! யாழ்.போதனா வைத்தியசாலையில் துயரம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த பெண் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே அந்தப் பெண் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு