தொண்டமானாறு நீர்ப்பாசனத் திணைக்கள பாலம் ஊடாக போக்குவரத்துக்கு அனுமதி!

ஆசிரியர் - Admin
தொண்டமானாறு நீர்ப்பாசனத் திணைக்கள பாலம் ஊடாக போக்குவரத்துக்கு அனுமதி!

வலிகாமம் கிழக்கு ஊடாக தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய உற்சவத்துக்குச் செல்லும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது என பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள் ஒத்துழைத்து செயற்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாலத்தினூடாக மக்களை போக்குவரத்திற்கு அனுமதிக்கும் வழிபாடுகளுடன் கூடிய சம்பிரதாய நிகழ்வு நேற்றுமாலை 6 மணிக்கு பாலத்தின் நுழைவாயிலில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு