யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களில் 851 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை..! 3 பேருக்கு கொரோனா தொற்று, பணிப்பாளர் தகவல்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களில் சுமார் 851 பேருக்கு பீ.சி.ஆர் (கொரோனா பரிசோதனை) மேற்கொள்ளப்பட்ட நிலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.
இதன்படி கடந்த 22.08.2020 திகதி இலங்கை விமானப்படை முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும், 24.08.2020 ம் திகதி தனிமைப்படுத்தல் மையம் இரனைமடுவைச் சேர்ந்த ஒருவருக்கும், இலங்கை விமானப்படை வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
கடந்த ஏழு நாடகளாக 851 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் (28.08.2020) : 109 பேர்
* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 9 பேர்
* சாவகச்கேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 40 பேர்
* பொது வைத்தியசாலை கிளிநொச்சி - 5பேர்
* பொது வைத்தியசாலை முல்லைத்தீவு – ஒருவர்
* இலங்கை விமானப்படைபிரிவு முல்லைத்தீவு – 5பேர்
* இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு – ஒருவர்
* இலங்கை விமானப்படைப்பிரிவு பளை – 3பேர்
* மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 20 பேர்
* மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 25 பேர்.