அரசியல் சிபார்சில் சமுர்த்தி வங்கியில் வேலைக்கமர்த்தப்பட்ட 15 பேர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
அரசியல் சிபார்சில் சமுர்த்தி வங்கியில் வேலைக்கமர்த்தப்பட்ட 15 பேர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்..!

ஐ.தே.கட்சியின் ஆட்சிக்காலத்தில் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரின் சிபார்சில் சமூர்த்தி வங்கிகளில் நியமிக்கப்பட்ட 15 பேர் கடந்த 25ம் திகதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 

ஐ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சிபார்சில் சமுர்த்தி வங்கிகளில் நிலவிய கணனி தரவாளர் வெற்றிடங்களுக்கு 15 பேர் நாள் சம்பள அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். 

2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் குறித்த நியமனம் இடம்பெற்ற நிலையில் அந்த ஆண்டு இறுதி வரையில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட சம்பளம் 

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் முழுமையாக நிறுத்தப்பட்டபோதும் தொடர்ந்தும் குறித்த பணியாளர்கள் தொடர்ந்தும் பணியாற்றியுள்ளனர். இதன் காரணமாக குறித்த விடயம்

நீதிமன்றின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் வழக்குத் தாக்கலில் இருந்த குறையின் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,

சமுர்த்தி அதிகார சபையானது இந்த பணியாளர்களை பணியில் வைத்திருப்பின் நீங்களே பொறுப்பாளிகள் என சமுர்த்தி வங்கிகளிற்கு கடிதம் அனுப்பியது. 

இதன் காரணமாக அத்தனை பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு