ஆவா (வினோதன்) உட்பட 6 பேர் பொன்னாலை - மானிப்பாய் வீதியில் கைது..! சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது என்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
ஆவா (வினோதன்) உட்பட 6 பேர் பொன்னாலை - மானிப்பாய் வீதியில் கைது..! சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது என்கிறது பொலிஸ்..

 “ஆவா” குழுவின் தலைவர் என கூறப்படும் ஆவா (வினோதன்)  உட்பட 6 பேர் பியர் ரின்களுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதற்காக தயாரானபோதே மானிப்பாய் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் - பொன்னாலை வீதியில் ஆவா குழுவினர் கூடியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த பகுதியை முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். 

சம்பவத்தில் ஆவா என்ற நபருடன் கைது செய்யப்பட்ட 5 பேரும் கைதடி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். 

குறித்த நபர்கள் மீது வழக்கு நிலுமைவகளோ அல்லது பிடியாணையோ இல்லாத நிலையில், சந்தேகததினடிப்படையிலேயே குறித்த நவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனடிப்படையில் குறித்த நபர்கள் மீது வழக்குகள், முறைப்பாடுகள் உள்ளனவா என ஆராய்ந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு