பாடசாலையை கறிக்கடையாக மாற்றிய அரசியல்வாதி..! சண்டியனாக மாறிய உப அதிபர், நியாயம் கேட்டு ஜனாதிபதியிடம் செல்லும் 18 ஆசிரியர்கள்..

ஆசிரியர் - Editor I
பாடசாலையை கறிக்கடையாக மாற்றிய அரசியல்வாதி..! சண்டியனாக மாறிய உப அதிபர், நியாயம் கேட்டு ஜனாதிபதியிடம் செல்லும் 18 ஆசிரியர்கள்..

அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில்பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தில் அரசியல் கட்சியொன்றின் தலையீடு காரணமாக அங்கு கல்வி கற்பிக்கும் சுமார் 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் வழங்குமாறு யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் விண்ணப்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் அதிபராக இருந்தவரை மாற்றி பிரதி அதிபரை அதிபராக தருமாறு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிட்ட அரசியல் கட்சியொன்றிடம் அப்பாடசாலை விருத்திச் சங்கம் சார்பில் ஒருவர் நாடியுள்ளார்.

இவ்வாறு தமது கோரிக்கையை குறித்த காட்சி ஏற்றுக் கொண்டால் தமது கிராமத்தில் கணிசமான வாக்குகளை குறித்த கட்சிக்கு தருவதாக பேரம் பேசப்பட்டதிற்கிணங்க குறித்த கட்சியினால் பாராளுமன்ற தேர்தல் முடிவுற்றதும் அதிபர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பாடசாலையில் கடமையாற்றும் பிரதி அதிபர் 

தானே அதிபர் என்ற நினைப்புடன் ஆசிரியர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். என ஆசிரியர் தரப்பால் கவலை தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதி அதிபர் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் அப்பாடசாலையில் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட 

பிறிதொரு அரசியல்வாதியிடம் சுமார் 5 இலட்சம் ரூபா நிதியை பெற்று பாடசாலை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந் நடவடிக்கை முறையாக இடம்பெறாமல் குறித்த நிதி பிரதி அதிபர் மற்றும் கட்சி சார்ந்த ஆதரவாளர்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் குறித்த பிரதி அதிபரின் சர்வாதிகாரமான செயற்பாடுகளினால் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் பாடசாலையில் இருந்து விடுவித்து தருமாறு வலயக்கல்விப் பணிமனையை நோக்கிப் படையெடுத்துள்ளனர். எழுத்து மூலம் இரு தடவைகளுக்கு மேல் தமது இடமாற்றத்தை கோரியதுடன் 

இச்சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த வலயக்கல்விப் பணிப்பாளர் மேற்படி பிரதி அதிபரை பிறிதொரு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கினார். ஆனால் குறித்த பிரதி அதிபர் அரசியல் கட்சி பின்புலத்தில் தனக்கான இடமாற்றத்தை நிறுத்துவதற்கான கைங்கரியத்தை மேற்கொண்டு வருவதுடன் வழங்கிய இடமாற்றத்தை ஏற்காமல் 

அதே பாடசாலையில் கடமையாற்றுகிறார். இதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளதுடன் தமது கற்பித்தல் செயல்பாடுகளை சரியாக முன்னெடுக்க முடியாதுள்ளனர். ஆகவே தமக்கு தொடர்ச்சியாக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தை 

நாட ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சந்திரராஜாவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு