திருத்த பணியின்போது கொங்கிறீற் முகப்பு கூரை இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சுன்னாகம் பகுதியில் வீடு திருத்தம் செய்து கொண்டிருந்தபோது கொங்கிறீற் முகப்பு கூரை இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

திருத்த பணிகளின்போது கூரை தளத்தை உடைக்க முயற்சித்தபோது சீமெந்திலான முகப்பு கூரை (கூட்ஸ்) இடிந்து விழுந்துள்ளது. 

இதன்போது இடிபாட்டுக்குள் சிக்கிய தொழிலாளி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் அல்ரர் போல் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு