யாழ்.வடமராட்சியில் ஒருவர் கைது..! இராணுவம் மீதான தாக்குதல் மற்றும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சியில் ஒருவர் கைது..! இராணுவம் மீதான தாக்குதல் மற்றும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பாம்..

யாழ்.வடமராட்சி மந்திகை பகுதியில் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றய தினம் இரவு வீடொன்றை முற்றுகையிட்டு சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். 

மந்திகை பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த நபரை கைது செய்ய முயற்சிக்கப்பட்டபோதும் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு அவரின் வீட்டில் அவர் இருப்பதாக 

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு