3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து..! தந்தையும் 2வயதான மகளும் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் 5 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

கட்டுப்பாட்டை இழந்த கார் இரு வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும், 2 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் கண்டி - குருநாகல் வீதியில் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. கொள்கலன் லொறியொன்றுடன் காரொன்று மோதியதாகவும், 

பின்னர் அக் காரானது மேலும் ஒரு கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது இரு கார்களில் பயணித்த ஐந்து பேரும், லொறியும் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் 

கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது இரண்டு வயது சிறுமியும் அவரது தந்தையும் உயிரிழந்துள்ள நிலையில், ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நிலம்பா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு